2015-05-30 15:48:00

ஜூன் 21,22 தேதிகளில் இத்தாலியின் தூரின் நகரில் திருத்தந்தை


மே,30,2015. "ஆண்டவரே, உம்மைச் சந்திக்கும் அருமையான கொடையை எமக்கு அருளும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று ஒன்பது மொழிகளில் பதிவு செய்துள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஜூன் 21,22 தேதிகளில் இத்தாலியின் தூரின் நகருக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜூன் 21 ஞாயிறு காலை 6.30 மணிக்கு வத்திக்கானிலிருந்து புறப்படும் திருத்தந்தை, காலை 8 மணியளவில் தூரின் Caselle விமான நிலையத்தைச் சென்றடைவார். காலை 8.30 மணிக்கு தூரின் Reale வளாகத்தில் தொழிலாளர்களைச் சந்திப்பார். அதன்பின்னர் பேராலயம் சென்று, இயேசுவின் இறந்த திருஉடலை மூடியிருந்த போர்வையைப் பார்வையிடுவார். 

காலை 10.45 மணிக்கு Vittorio வளாகத்தில் திருப்பலி, இளையோர் கைதிகள், குடிபெயர்ந்தோர் சிலர் மற்றும் ஒரு உரோமா நாடோடி இனக் குடும்பத்துடன் பேராயர் இல்லத்தில் மதிய உணவு.. இப்படி திருத்தந்தையின் பல பயணத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

22ம் தேதி திங்களன்று திருத்தந்தை, Valdese கிறிஸ்தவ சபையினரைச் சந்திப்பார், தனது குடும்ப உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவு அருந்துவார் என, திருத்தந்தையின் திங்கள் தின பயணத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.