2015-05-28 16:29:00

திருத்தந்தை, உருகுவாய் முன்னாள் அரசுத்தலைவர் சந்திப்பு


மே,28,2015. இளவரசர் Alexander von Sachsen அவர்கள் பத்துப் பேர் அடங்கிய குழுவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாடினார். மரியா இம்மானுவேல் அவர்களின் தத்துப் புதல்வராகிய இளவரசர் அலெக்சாண்டர், Saxony அரண்மனையின் தலைவராவார்.

இன்னும்,  உருகுவாய் நாட்டு முன்னாள் அரசுத்தலைவர் José Mujica Cardano அவர்களும் தனது மனைவியுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்தார்.

2014ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி முதல் 2015ம் ஆண்டு மார்ச் முதல் தேதி வரை உருகுவாய் நாட்டு முன்னாள் அரசுத்தலைவராகப் பணியாற்றியவர் செனட்டர் Cardano.

இன்னும், "கிறிஸ்தவர்கள், கோட்பாட்டுக்கு அல்ல, ஆனால் ஒரு மனிதருக்குச் சாட்சிகள்; இந்த மனிதரே கிறிஸ்து, எல்லாருக்கும் ஒரே மீட்பராகிய கிறிஸ்து உயிர்த்துவிட்டார் மற்றும் வாழ்கிறார்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.