2015-05-28 16:05:00

செய்தியாளர்க்கு எதிரான வன்முறைகளுக்கு ஐ.நா. கண்டனம்


மே,28,2015. உலகெங்கும் செய்தியாளர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கும், உரிமை மீறல்களுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு அவை.

சுதந்திரமாகவும், தனித்துவத்துடனும், பாரபட்சமின்றியும் செய்தியாளர்கள் செயலாற்ற வேண்டியது, ஒரு சனநாயக சமுதாயத்தின் முக்கிய அடித்தளங்களில் ஒன்று எனவும், செய்தியாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கு அனைத்து அரசுகளும் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு அவை.

செய்தியாளர்கள் கொலை செய்யப்படுவது 2006ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாகக் கூறும் அவ்வவை, குற்றவாளிகள் தண்டிக்கப்படுமாறும் நாடுகளைக் கேட்டுள்ளது.

ஆயதம் ஏந்திய மோதல்களில் கொல்லப்படும் செய்தியாளர்களில் ஏறக்குறைய 95 விழுக்காட்டினர் உள்ளூர் செய்தியாளர்கள் என்றும் ஐ.நா. பாதுகாப்பு அவை கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.