2015-05-23 15:43:00

திருத்தந்தை, பல்கேரிய, மாசிடோனியப் பிரதமர்கள் சந்திப்பு


மே,23,2015. பல்கேரியப் பிரதமர் Boyko Borissov, மாசிடோனிய பிரதமர் Nikola Gruevski ஆகிய இருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று தனித்தனியே வத்திக்கானில் சந்தித்து உரையாடினர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் இத்தலைவர்கள் சந்தித்தனர். இவ்விரு பிரதமர்களுடன் இவ்விரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.

இவ்விரு பிரதமர்களும், இஞ்ஞாயிறன்று உரோம் நகரில் சிறப்பிக்கப்படும் புனிதர்கள் சிரில் மெத்தோடியஸ் விழாவை முன்னிட்டு உரோம் வந்துள்ளனர். 

பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.