2015-05-21 15:13:00

நேர்காணல்––என்னைக் கவர்ந்த இறையடியார் பேராயர் ரொமேரோ


மே,21,2015. மத்திய அமெரிக்க நாடாகிய எல் சால்வதோரின் சான் சால்வதோரில் வருகிற சனிக்கிழமையன்று பேராயர் இறையடியார் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படவிருக்கிறார். இந்நிகழ்வில் 12க்கும் மேற்பட்ட அரசுகளின் தலைவர்களும், 6 கர்தினால்களும், நூற்றுக்கு மேற்பட்ட ஆயர்களும் 2 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, தயாரிப்பு வேலைகளும் அசுர வேகத்தில் நடந்து வருகின்றன. இவ்வேளையில், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட மறைசாட்சி மாமனிதர் பேராயர் ரொமேரோ பற்றி இன்று தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார் அ.பணி X.D.செல்வராஜ். தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த அ.பணி X.D.செல்வராஜ் அவர்கள், ஆன்ம வாழ்வு, மண்ணைச் சுட்ட நெருப்பு என்ற தனது புத்தகங்களில் பேராயர் ரொமேரோ அவர்கள் பற்றி எழுதியிருப்பவர்








All the contents on this site are copyrighted ©.