2015-05-20 16:13:00

பாலஸ்தீன அரசு, வத்திக்கான் ஒப்பந்தம் - அரேபிய அவை மகிழ்ச்சி


மே,20,2015. பாலஸ்தீனாவை ஒரு நாடு என்று வத்திக்கான் ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு முடிவு என்று, அரேபிய நாடுகள் ஒன்றிய அவையின் பொதுச் செயலர், நபில் எலராபி (Nabil Elaraby) அவர்கள் கூறியுள்ளார்.

வத்திக்கான் அறிவித்துள்ள இந்த முடிவினால், பாலஸ்தீனிய மக்கள் இதுவரைப் பெறாமல் தவித்த உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தான் நம்புவதாக எலராபி அவர்கள் Fides செய்திக்கு அளித்த குறிப்பில் கூறியுள்ளார்.

வத்திக்கான் காட்டியுள்ள இந்த வழியை இன்னும் பல நாடுகள் பின்பற்றி, பாலஸ்தீன நாட்டை உலக அரங்கில் உரிமைகளும், மதிப்பும் பெற்ற ஒரு நாடாக மாற்றும் என்ற தன் நம்பிக்கையை, அரேபிய நாடுகள் ஒன்றிய அவையின் பொதுச் செயலர், எலராபி அவர்கள் வெளியிட்டார்.

பாலஸ்தீனாவை ஒரு நாடு என்று அறிவித்து, 2012ம் ஆண்டு, ஐ.நா. பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 'பாலஸ்தீன அரசு' என்ற வார்த்தைகளை வத்திக்கான் பயன்படுத்தி வந்துள்ளது என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.