2015-05-15 16:01:00

கடுகு சிறுத்தாலும் : நூறு விழுக்காட்டு அன்பைக் காட்டுங்கள்


ஒரு குட்டிப் பெண்ணும் குட்டிப் பையனும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் கைகளில் நிறைய பொம்மைகளும், அந்தக் குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தன.

அந்தப் பையன் சொன்னான், “என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சிருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா” என்று. குட்டிப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அந்தப் பையன் தன்னிடம் இருந்த நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு, மற்ற பொம்மைகளை, குட்டிப் பெண்ணிடம் கொடுத்தான். குட்டிப் பெண் தன்னிடம் இருந்த எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு, பொம்மைகளை வாங்கிக்கொண்டாள்.

அன்றிரவு அந்தக் குட்டிப் பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்தப் பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக்கொண்டே, உறக்கம் இல்லாமல் புரண்டுகொண்டிருந்தான்.

நாம் அடுத்தவர் மேல் நூறு விழுக்காடு நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் நம்மிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.