2015-05-14 15:50:00

Pax Christi உலக மாநாட்டிற்கு, திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


மே,14,2015. மே 13, இப்புதன் முதல், 17, வருகிற ஞாயிறு முடிய, புனித பூமியின் பெத்லகேமில் நடைபெறும் Pax Christi உலக மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் அனுப்பியுள்ளார்.

நம் உள்ளத்தில் கிறிஸ்துவின் ஆட்சி எவ்வளவுக்கெவ்வளவு ஆழப் பதிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உடன்பிறப்பு உணர்விலும், நீதியிலும், அமைதியிலும் நம் உள்ளங்கள் நிறையும் என்று திருத்தந்தை, இவ்வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரால், இவ்வியாழன் காலை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை, Pax Christi அனைத்துலகத் தலைவர், மற்றும் பொதுச் செயலருக்கு அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.