2015-05-13 16:27:00

இளையோர் காணும் ஐரோப்பா கனவு நிஜமல்ல - கானா ஆயர்கள்


மே,13,2015. ஐரோப்பாவில் அடியெடுத்து வைப்பதால் தங்கள் வாழ்வு தானாகவே சுகமாக மாறிவிடும் என்று ஆப்ரிக்க இளையோர் கனவு காண்பதை நிறுத்தவேண்டும் என்று ஆப்ரிக்காவின் கானா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

பல நூறு ஆப்ரிக்க இளையோர், மத்தியத் தரைப் பகுதி பாலைவனங்களிலும், மத்தியத்தரைக் கடலிலும் உயிரிழந்துவரும் அவலத்தை தடுக்க, ஆப்ரிக்க அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று காண நாட்டு ஆயர்கள் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் இளையோரின் எண்ணிக்கை கூடிவரும் இவ்வேளையில், அவர்களுக்கு ஏற்ற கல்வி வசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கும் வகையில், ஆப்ரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் சமுதாய சூழல் மாற்றங்கள் பெறவேண்டும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வலியிறுத்தியுள்ளனர்.

கானா நாடு ஒவ்வோர் ஆண்டும் கடனில் மூழ்கிவருகிறது என்பதைக் குறிப்பிடும் ஆயர்களின் அறிக்கை, ஆப்ரிக்க அரசுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, அக்கண்டத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.