மே,12,2015. மற்றவர்களின் தவறுகளை சகித்துக் கொள்வது நமக்கு ஏன் கடினமாக உள்ளது, நம்முடைய பாவங்களை இயேசு ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் மறந்துவிட்டோமா? என்ற கேள்வியை தன் டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறரை ஏற்று அரவணைப்பது, அவர்களின் தவறுகளை மன்னிப்பது போன்ற கருத்துக்களை தொடர்ந்து எடுத்தியம்பிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இச்செவ்வாய்ய்க்கிழமை டுவிட்டர் செய்தியிலும் அதையே வலியுறுத்தியுள்ளார். இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும், பிறரின் தவறுகளை சகித்து, அவர்களை ஒப்புரவில் ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |