2015-05-08 15:40:00

திருத்தந்தை, பெந்தகோஸ்து போதகர்கள் சந்திப்பு


மே,08,2015. பெந்தகோஸ்து கிறிஸ்தவ சபையின் ஏறக்குறைய நூறு போதகர்களை இவ்வியாழன் மாலையில் வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த இப்போதகர்களுடன் இடம்பெற்ற இச்சந்திப்பு ஒன்றிப்பின் செபச்சூழலில் இடம்பெற்றதாக, திருப்பீட அறிக்கை கூறுகின்றது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள் திருத்தந்தையுடன் இச்சந்திப்பில் உடனிருந்தார்.

கடந்த ஆண்டு திருத்தந்தை பார்வையிட்ட இத்தாலியின் கசெர்த்தா பெந்தகோஸ்து கிறிஸ்தவ சபை போதகர் Giovanni Traettino அவர்கள் தலைமையில் இப்போதகர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.