2015-05-04 16:09:00

திருத்தந்தை : தாந்தே அவர்கள் நம்பிக்கையின் முன்னறிவிப்பாளர்


மே,04,2015. இத்தாலிய அரசால் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட Dante Alighieriயின் 750வது பிறந்த நாளை முன்னிட்டு கர்தினால் Gianfranco Ravasi வழியாக வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய அரசு கொண்டாட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொண்ட, திருப்பீடக் கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ரவாசி மூலமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், 750 ஆண்டுகளுக்கு முன் பிறந்த, சிறந்த சிந்தனையாளரும், கவிஞருமான தாந்தேயின் வரிகளை பல திருத்தந்தையர்கள் தங்கள் மேய்ப்புப்பணி அறிக்கைகளில் பயன்படுத்தியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாந்தே இறந்ததன் 700ம் ஆண்டை 2021ல் சிறப்பிப்பதற்கான தயாரிப்புகள் தற்போதே துவக்கப்பட்டுள்ளது பற்றியும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கவிஞர் தாந்தே அவர்கள், நம்பிக்கையின் முன்னறிவிப்பாளராக இருந்தார் என்றும் பாராட்டியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.