2015-04-28 16:32:00

கிறிஸ்தவ சமூகம் இறைவனைத் தேடுவோரை வரவேற்கும் இல்லம்


ஏப்.28,2015. “ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் இறைவனைத் தேடுவோரை வரவேற்கும் இல்லமாக அமைய வேண்டும், அதோடு, ஒரு சகோதரரையோ அல்லது ஒரு சகோதரியையோ தேடுவோரின் குரலுக்குச் செவிமடுக்கும் சமூகமாகவும் இருக்க வேண்டும்” என்று, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற டிசம்பர் 8ம் தேதி ஆரம்பமாகும் இரக்கத்தின் புனித ஆண்டுக்குத் தயாரிப்பாக, இத்தாலியின் சிசிலியில் நடந்த கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, சிசிலித் திருஅவை, இறைவனின் இரக்கத்துக்குச் சான்றாக வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய தயாரிப்பு கருத்தரங்கு நடத்துவதற்கு, தனது பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார். இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு, 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.