2015-04-28 16:27:00

உலகில் பெருமளவு மக்களுக்குப் போதிய மருத்துவம் கிடைப்பதில்லை


ஏப்.28,2015. உலகின் பெரும்பாலான கிராமப்புற மக்கள் அத்தியாவசிய மருத்துவ வசதிகள் இன்றி வாழ்கின்றனர் என்று ஐ.நா. உலக தொழில் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.

உலகில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்களில் 56 விழுக்காட்டினருக்குப் போதிய நலவாழ்வு வசதிகள் கிடையாது என்றும், வறுமையை அதிக அளவில் எதிர்நோக்கும் நாடுகளே இதனால் அதிகம் பாதிப்படைந்துள்ளன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பாகத்தினருக்கு பாதுகாப்பான அறுவை சிகிச்சைக்கோ அல்லது தங்களால் சிகிச்சைக்குரிய கட்டணம் செலுத்தக்கூடிய அறுவை சிகிச்சைக்கோ வழியில்லாமல் இருக்கிறது எனவும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில், ஏழைகள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர், அறுவை சிகிச்சைக்கு வழியில்லாத காரணத்தால், குடல்வால் வெடிப்பு, எலும்பு முறிவு, மகப்பேறு கோளாறுகள் போன்ற எளிதில் குணப்படுத்தக்கூடிய பாதிப்புகளால் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.