2015-04-27 16:27:00

பாதிக்கப்பட்ட நேபாள மக்கள் மத்தியில் கத்தோலிக்க அமைப்புகள்


ஏப்.27,2015. மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் இறந்திருக்கலாம் என அஞ்சப்படும் நேபாளத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்கியுள்ளன கிறிஸ்தவ அமைப்புகள்.

நிலநடுக்கத்தின் இழப்பீடுகள் குறித்து அறிய வந்தவுடனேயே இத்தாலிய ஆயர் பேரவை 30 இலட்சம் யூரோக்களை, பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்கென, இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ வழியாக அனுப்பியுள்ளது.

CAFOD என்ற பிரிட்டனின் கிறிஸ்தவ உதவி அமைப்பும் 50 ஆயிரம் பவுண்டுகளை உடனடியாக நேபாள நிவாரணப் பணிக்காக அனுப்பியுள்ளது.

இது தவிர, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பும், பேரிடர் துடைப்பு நிறுவனமான சமாரித்தன் அமைப்பும், தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றி வருகின்றன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.