2015-04-27 16:30:00

திருத்தந்தை:தலைவன் என்ற மனநிலையை மாற்றி, பணியாளாக மாறுங்கள்


ஏப்.27,2015. கூலிக்கு மேய்ப்பவர் போல் அல்லாமல், இயேசு கிறிஸ்துவோ, தன் மந்தையின் வாழ்வில் பங்கெடுத்து அதை வழிநடத்திப் பராமரிக்கும் நல்லாயன் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நல்லாயன் குறித்த இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் பற்றி அல்லேலூயா வாழ்த்தொலி செப உரையிலும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மந்தையை வழிநடத்திப் பாதுகாப்பது என்பது, இயேசுவின் தன்னலமற்ற நோக்கமாகும், ஏனெனில் தன் மந்தைக்காக உயிரையே கையளித்தவர் அவர் என்றார்.

இயேசுவின் இந்த தியாகத்தை நன்றியோடு நினைவுகூர்ந்தால் மட்டும் போதாது, மாறாக, தலைவர் என்ற மனநிலையிலிருந்து நாம் இறங்கிவந்து, இயேசுவைப்போல் பணியாளராக மாற பயிலவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இயேசுவைப்போல் தம்மையே தாழ்த்தி பணியாள்போல் சேவையாற்ற வேண்டியது, குறிப்பாக ஆயர்களுக்கும் குருக்களுக்கும் தேவையான பண்பு எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.