2015-04-23 16:39:00

ஆர்மேனியப் படுகொலைகள் நினைவு நிகழ்வில் கர்தினால் Koch


ஏப்.23,2015. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவைத் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள், ஆர்மேனியா நாட்டிற்கு, 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த முதல் படுகொலைகள் என்று கருதப்படும் ஆர்மேனியக் கொலைகள் நடைபெற்றதன் முதல் நூற்றாண்டு நிகழ்வுகளில், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளும் கர்தினால் Koch அவர்கள், இப்புதனன்று, ஆர்மேனியாவின் தலைநகர் Yerevan சென்றடைந்தார்.

ஆர்மேனியப் படுகொலைகளில் இறந்தவர்களை, Yerevanல் அமைந்துள்ள Etchmiadzin பேராலயத்தில் புனிதர்களாக உயர்த்தும் நிகழ்வு, இவ்வியாழன் நடைபெற்றபோது, கர்தினால் Koch அவர்கள், அந்நிகழ்வில் கலந்துகொண்டு, திருத்தந்தையின் செய்தியை வாசித்தார்.

1915ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்மேனியாவில் நிகழ்ந்த படுகொலைகளின் முதல் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகள், இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்படுகையில், கர்தினால் Koch அவர்கள், அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.