2015-04-21 15:45:00

மலேரியாவை முழுமையாகக் கட்டுப்படுத்த மேலும் முதலீடுகள் தேவை


ஏப்.21,2015. மலேரியா நோய்க்கு எதிரான உலகளாவிய முயற்சிக்கு அனைத்துலக சமுதாயம் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கியிருக்கின்ற போதிலும், இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தி அதனைப் பரவாமல் தடைசெய்வதற்கான 2015ம் ஆண்டின் ஐ.நா. திட்டத்துக்கு மேலும் முதலீடுகளும், அதிக ஒத்துழைப்பும் அவசியம் என்று ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 25, வருகிற சனிக்கிழமையன்று உலக மலேரியா நோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. அதிகாரிகள், மலேரியா நோய்த் தடுப்பு சிறப்பு மில்லென்ய திட்டங்கள் 64 நாடுகளில் செயல்படுத்தப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

கொசுக்களால் பரவும் மலேரியாவைத் தடை செய்வதற்கு, 2030ம் ஆண்டுக்குள் 100 கோடி டாலர் தேவைப்படுகின்றது என்றும் ஐ.நா. கூறுகிறது.

மலேரியா நோய் இறப்புகள் 2000மாம் ஆண்டிலிருந்து உலக அளவில் 47 விழுக்காடும், ஆப்ரிக்காவில் 54 விழுக்காடும் குறைந்துள்ளன என்று உலக நலவாழ்வு கூறுகிறது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.