2015-04-21 15:27:00

மறைசாட்சிகளில் கிறிஸ்துவின் மாபெரும் வெற்றி சுடர்விடுகின்றது


ஏப்.21,2015. கிறிஸ்துவுக்காகக் கொலை செய்யப்படுபவர்களில் கிறிஸ்துவின்  மாபெரும் மற்றும் ஆறுதலளிக்கும் வெற்றி சுடர்விடுகின்றது என்று எகிப்து காப்டிக் கிறிஸ்தவ ஆயர் Antonios Aziz Mina அவர்கள் கூறியுள்ளார்.

28 எத்தியோப்பியக் கிறிஸ்தவர்கள் கொடூரமாய்க் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்த ஆயர் Aziz Mina அவர்கள், ஆழ்ந்த வேதனையில் இவ்வன்முறைகளை விசுவாச ஒளியில் பார்ப்பதாகவும் கூறியுள்ளார்

கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாவது முடிந்துவிடவில்லை, வரலாறு முழுவதும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும், திருஅவை மறைசாட்சி வாழ்வு குறித்து ஒருபோதும் புகார் சொன்னது கிடையாது, அதனை கிறிஸ்துவின் மாபெரும் வெற்றியாகக் கொண்டாடுகின்றது என்றும் கூறியுள்ளார் ஆயர் Aziz Mina.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, “சிலுவையின் நாட்டுக்கு” எதிராக என்று எழுதியே இக்காணொளிகளை எப்போதும் வெளியிட்டு வருகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.