2015-04-18 15:18:00

இந்தியாவில் தேசிய அமைதி இயக்கம்


ஏப்.18,2015. இந்தியாவின் பன்முகங்கள் பற்றியும், வலுவிழந்தோருக்கு அக்கறை காட்டப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இளையோருக்கு எடுத்துச்சொல்லும் நோக்கத்தில் இந்தியாவில் தேசிய அமைதி இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மதங்களைச் சார்ந்த அமைதி ஆர்வலர்கள் இன்டோர் நகரில் ஒன்றுகூடி இவ்வியக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய அமைதி இயக்கம், கலவரங்களுக்குத் தீர்வு காணவும், பன்மைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட அமைதிச் சமூகங்களைக் கட்டியெழுப்பவுமான நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் பன்முக மரபில் நம்பிக்கை கொண்டு அன்புக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப உண்மையிலேயே தங்களை அர்ப்பணிக்க முன்வரும் யாரும் இதில் உறுப்பினராக இணையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேசிய அமைதி இயக்கம், கத்தோலிக்க அருள்பணியாளர் Varghese Alengaden அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.