2015-04-17 12:55:00

கடுகு சிறுத்தாலும்...: வாழ்வின் விடியல் தொடங்கும் நேரம்


துறவி ஒருவர் தன் மாணவர்களை அழைத்து அவர்களிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டார்: “இரவு முடிந்து விடியல் தொடங்கும் நேரம்  எப்போது எனக் கூற முடியுமா?”

அதற்கு ஒரு மாணவர்,  “எதிரில் வருவது நாயா? ஆட்டுக்குட்டியா என அறிந்து கொள்ளும்  அளவிற்கு வெளிச்சம் இருந்தால், அதுவே விடியல் தொடங்கும் நேரம்” என்றார்.

மற்றொரு மாணவர், “எதிரில் உள்ளது கொய்யா மரமா? அத்தி மரமா?  என்று அறியும் அளவிற்குத் தேவையான வெளிச்சம் இருந்தால், அதுவே விடியல் தொடங்கும் நேரம்”  என்றார்.  

“இரண்டும் இல்லை” என்றார் துறவி.

“ஐயா, சரியான விடையைத் தாங்களே கூறுங்கள்” என்றனர் மாணவர்கள்.

அதற்குத் துறவியோ, “அறிமுகமில்லாத அன்னியர் ஒருவர் நம்மிடையே வரும் பொழுது, அவரும் நம் சகோதரர் என்று நாம் எப்பொழுது நினைக்கிறோமோ, அதுவே விடியல் தொடங்கும் நேரமாகும்” என்று அமைதியுடன் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.