2015-04-13 16:07:00

ஈராக் அகதிகளிடையே வெஸ்மின்ஸ்டர் கர்தினால்


ஏப்.13,2015. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டு கத்தோலிக்கர்களின் ஒருமைப்பாட்டுணர்வை ஈராக்கில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நேரடியாகத் தெரிவிக்கும் பொருட்டு அப்பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளார், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்.

கடந்த சனிக்கிழமை முதல் இத்திங்கள் வரை ஈராக்கில் மூன்று நாள் பயணம் மேற்கொண்ட கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், கடந்த ஆண்டு மோசூல் நகரிலிருந்து IS இஸ்லாமியத் தீவிரவாத குழுவால் விரட்டியடிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்காண மக்க்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதே, தன் பயணத்தின் நோக்கம் என்றார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் திருத்தந்தையின் பிரதிநிதியாக ஈராக்கில் கர்தினால் ஃபிலோனி பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, கடந்தவார இறுதியில், ஈராக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார் கர்தினால் நிக்கொல்ஸ்

மத்தியகிழக்குப்பகுதியில் குடிபெயர்ந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும், அனைத்துலக சமுதாயத்திற்கு விடுத்துள்ளார் வெஸ்ட்மின்ஸ்டர் கர்தினால்.

ஆதாரம்: ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.