ஏப்.13,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இவ்வாண்டு ஏறத்தாழ 600 பேர் அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்பட உள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 100 அதிகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 477 பேர் அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், இவ்வாண்டு இது 595 ஆக உயர்ந்துள்ளது என்றார் அந்நாட்டின் ஆயர் பேரவையின் அருள்பணியாளர்களுக்கான அவையின் தலைவர், ஆயர், மைக்கேல் Burbidge.
அண்மைக்காலங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் அருள்பணியாளர்களாக பணிபுரிய விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்கு, குடும்பஙகள், பங்குத்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்கப்பள்ளிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன என மேலும் கூறினார் ஆயர் Burbidge.
இவ்வாண்டில் அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்பட உள்ளோருள் 60 விழுக்காட்டினர் கல்லூரிபடிப்பை முடித்தபின் குருத்துவ பயிற்சி இல்லங்களில் நுழைந்தவர்கள் ஆவர்.
ஆதாரம்: EWTN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |