2015-04-11 15:53:00

கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுவதற்கு துறவியர் கடும் கண்டனம்


ஏப்.11,2015. உலகில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகளுக்கு எதிரான கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பயிற்சியாளர்கள்.

உரோமையில் நடைபெற்ற  பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்தப் பயிற்சியாளர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்ட செய்தியில், உலகில் அமைதியைக் கொண்டுவருவதற்கு அனைத்துலக சமுதாயம் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுள்ளனர்.

இயேசு கிறிஸ்துவில் கொண்டிருக்கும் விசுவாசத்துக்காக உலகில் துன்புறும் அனைவரோடும் தாங்கள் சிறப்பான ஒருமைப்பாட்டுணர்வு கொண்டிருப்பதாகவும், இக்கிறிஸ்தவர்கள் வழங்கும் சான்று வாழ்வுக்குத் தாங்கள் நன்றி தெரிவிப்பதாகவும் அச்செய்தி கூறுகிறது.  

இச்செய்தியில், திருப்பீட அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுப் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz, அதன் செயலர் பேராயர் Jose Rodriguez Carballo ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.