2015-04-10 15:44:00

உலகின் கல்வி இலக்கை எட்டுவதற்கு மேலும் முயற்சிகள் தேவை


ஏப்.10,2015. ஐ.நா.வில் இரண்டாயிரமாம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்வி குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் உலகில் மூன்றில் ஒரு பகுதி நாடுகள் நிறைவேற்றியுள்ளன என்று யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள் கூறினார்.

இரண்டாயிரமாம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட, எல்லாருக்கும் கல்வி என்ற 15 ஆண்டுத் திட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பொக்கோவா அவர்கள், உலகிலுள்ள நாடுகளில் ஐம்பது விழுக்காட்டு நாடுகளே, அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை எட்டியுள்ளன என்றும் கூறினார்.

2030ம் ஆண்டில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை எட்டுவதற்கு ஆண்டுக்கு 2,200 கோடி டாலர் நிதி தேவைப்படுகின்றது என்பதையும் குறிப்பிட்ட பொக்கோவா அவர்கள், 1990களோடு ஒப்பிடுகையில், தற்போது இலட்சக்கணக்கான சிறார் பள்ளிக்குச் செல்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.