ஏப்.,07,2015. அண்மையில் லிபியாவிலும் கென்யாவிலும் தங்கள் விசுவாசத்திற்காகக் கொலைச்செய்யப்பட்டவர்கள், கிறிஸ்தவ மறைசாட்சிகள் என்று கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள் கூறினார்.
இஸ்லாமியத் தீவிரவாதிகளால் லிபியாவிலும் கென்யாவிலும் கொல்லப்பட்ட கிறிஸ்தவ மறைசாட்சிகளை நினைவுகூரும் நாம், இத்தகையத் தீவிரவாத தாக்குததல்களை அன்பின் துணைகொண்டு தடுக்கவேண்டுமேயொழிய, வன்முறையின் துணைகொண்டல்ல என எடுத்துரைத்தார் ஆங்கிலிக்கன் பேராயர் வெல்பி.
பிப்ரவரி மாதத்தில் 22 காப்டிக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக லிபியாவில் கொல்லப்பட்டது, மற்றும், இம்மாதம் இரண்டாம் தேதி கென்ய கிறிஸ்தவர்கள் 148பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிப் பேசினார் பேராயர்.
கிறிஸ்தவ விசுவாசத்திற்காக மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படுவது தற்போது மட்டுமல்ல, கடந்த ஆண்டிலும் பெருமெண்ணிக்கையில் காணப்பட்டது என மேலும் கூறினார் கான்டர்பரி பேராயர் வெல்பி.
ஆதாரம் : The Independent\வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |