2015-04-07 16:16:00

சிரியாவில் கிறிஸ்தவக் கோவில் ஒன்றின்மீது தாக்குதல்


ஏப்.,07,2015. சிரியாவின் Tel Nasri கிராமத்தில் உள்ள 80 ஆண்டு பழமையுடைய கிறிஸ்தவக்கோவில் ஒன்று இஸ்லாம் தீவிரவாதிகளால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

அன்னைமரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளான இந்த ஞாயிறன்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து விரட்டப்பட்ட கிறிஸ்தவர்களின் புகலிடமாக இருந்த இந்த Tel Nasri கோவில் தகர்க்கப்பட்டுள்ளதன் விளைவாக, கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரங்கள் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தாங்கள் கைப்பற்றும் இடங்களில் உள்ள கிறிஸ்தவக் கோவில்களை அழிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர் ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகள்.

கிறிஸ்தவக் குன்று என்ற பொருள் கொண்ட Tel Nasri கிராமப்பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராக கிறிஸ்தவர்களும் குர்த் இன மக்களும் போராடிவருவது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Catholic Online\வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.