2015-04-07 15:55:00

உலகில் ஆபத்து நிறைந்த பத்து நாடுகள்


ஏப்.,07,2015. உலகில் ஆபத்து நிறைந்த முதல் பத்து நாடுகளின் வரிசையில் ஒன்பது இடங்களை இஸ்லாமிய நாடுகள் கொண்டுள்ளதாக அண்மையில் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளான ஈராக்கும் சிரியாவும் ஆபத்து நிறைந்த நாடுகள் வரிசையில் முதல் இரண்டு இடங்களை வகித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக நைஜீரியா, சொமாலியா, ஆஃப்கானிஸ்தான், லிபியா, ஏமன், பாகிஸ்தான், உக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் வருகின்றன.

ஒரு நாட்டில் இடம்பெறும் தீவிரவாத நடவடிக்கைகள், தாக்குதல்கள், தீவிரவாதத்திற்கு பலியாவோர் மற்றும் காயமுறுவோரின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Christian Action\வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.