2015-04-06 15:06:00

போரைச் சந்தித்த மக்கள் ஒப்புரவுடன் வாழவேண்டும், மன்னார் ஆயர்


ஏப்.06,2015. இலங்கையில் போரை எதிர்கொண்டுள்ள மக்கள் இனிமேல் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதை அந்நாட்டுத் தலைவர்களுக்கு கூற விரும்புவதாக, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய மன்னார் ஆயர் ஜோசப் அவர்கள், இந்நாட்டிலே ஆண்டவர் புதியதோர் காரியத்தைச் செய்து, புதியதோர் அரசை தந்திருக்கிறார், இந்நாட்டை ஆட்சி செய்கின்றவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து பொறுப்புள்ளவர்களாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் ஒப்புரவையும், இணக்கத்தையும் ஏற்படுத்தி அமைதியைக் இலங்கையை ஆள்வோர், தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து பொறுப்புள்ளவர்களாக செயல்பட வேண்டும் - மன்னார் ஆயர்.கொண்டுவரும் எண்ணமுடையவர்களாக இருக்க வேண்டும் என மேலும் கேட்டுக் கொண்டார் ஆயர் இராயப்பு ஜோசப் .

ஆதாரம் : ஆதவன் /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.