2015-04-01 16:35:00

அருள்பணியாளர்களே திருஅவையின் முதுகெலும்பு-முதலாம் ஜான் பால்


ஏப்,01,2015. மக்களின் நல் மேய்ப்பராகப் பணியாற்றுவதே, அருள்பணியாளர்களின் மிக முக்கியமானப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவது, மக்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணப்படி, அருள்பணியாளர்களின் ஆன்மிகம்" என்ற தலைப்பில், இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரை வழங்கிய, அருள் பணியாளர் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியமினோ ஸ்டெல்லா அவர்கள், இவ்வாறு கூறினார்.

அருள்பணியாளர் என்பவர் யார் என்ற கேள்விக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் பதிலில், அருள்பணியாளர், கிறிஸ்துவின் சீடர் என்பதும், மக்களை வழிநடத்தும் மேய்ப்பர் என்பதும் முதலிடம் பெறுகின்றன என்று கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இறைவாக்கினர்களாகச் செயல்படுவதும், அருள்பணியாளர்கள் பெற்றுள்ள முக்கியாமான அழைப்பு, என்று திருத்தந்தை கூறிவருவதையும், கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

திருஅவையின் முதுகெலும்பாக விளங்குவது, மக்களின் மேய்ப்பர்களாகப் பணியாற்றும் அருள்பணியாளர்களே என்று மறைந்தத் திருத்தந்தை, முதலாம் ஜான் பால் அவர்கள் கூறியதையும், கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

மக்களின் நல் மேய்ப்பராகப் பணியாற்றுவதே, அருள்பணியாளர்களின் மிக முக்கியமானப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவது, மக்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணப்படி, அருள்பணியாளர்களின் ஆன்மிகம்" என்ற தலைப்பில், இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரை வழங்கிய, அருள் பணியாளர் பேராயத்தின் தலைவர்ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.