2015-03-31 16:46:00

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பயிற்சியாளர் மாநாடு ஏப்.8-11,2015


மார்ச்,31,2015. திருஅவையில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோருக்குப் பயிற்சி அளிப்பவருக்கென இம்மாதம் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை உரோம் நகரில் அனைத்துலக மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு நிகழ்வுகளில் ஒன்றாக, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர் திருப்பேராயம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

உரோம் நகர் Ergif பயணியர் மாளிகையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஏறக்குறைய 1,200 பயிற்சியாளர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், ஐம்பதுக்கு மேற்பட்ட வல்லுனர்கள் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11ம் தேதி காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர் திருப்பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார்.

திருஅவையில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோருக்குப் பயிற்சி அளிப்பவருக்கென இம்மாதம் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை உரோம் நகரில் அனைத்துலக மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு நிகழ்வுகளில் ஒன்றாக, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர் திருப்பேராயம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதுஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.