2015-03-30 16:38:00

எகிப்து க‌ல்வித் திட்ட‌த்தில் கிறிஸ்த‌வ‌ச் ச‌மூக‌ம்


மார்ச்,30,2015.  எகிப்து நாட்டில் கல்வியறிவின்மையை ஒழிக்கும் அரசின் திட்டத்தில் அரசுடன் இணைந்து உழைக்க உள்ளதாக கையெழுத்திட்டுள்ளது, அந்நாட்டு காப்டிக் கிறிஸ்தவ  சபை.

எகிப்து அரசால் உருவாக்கப்பட்டு காப்டிக் கிறிஸ்தவ சபையின் முழு ஆதரவைப் பெற்றுள்ள இக்கல்வித் திட்ட ஒத்துழைப்புக் கையெழுத்து, காப்டிக் கிறிஸ்தவ சபையின் தலைமை இல்லத்தில் இடம்பெற்றது.

காப்டிக் முதுபெரும் தந்தை இரண்டாம் Tawadros அவர்கள் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, அக்கிறிஸ்தவ சபையின் சமூக மேம்பாட்டுத்துறைத் தலைவர்  ஆயர் Ioannis, கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : Fides/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.