ஓர் இளைஞர் நீச்சல் பயிற்சியாளரிடம் சென்று, ஐயா, நான் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்புகிறேன், அதற்கு நிபந்தனை ஏதும் உண்டா? எனக் கேட்டார். அதற்குப் பயிற்சியாளர் காரணம் கேட்க, நான் ஒரு டன் முட்டைக்கோசையும் எடுத்துச் செல்லுமளவுக்கு நீச்சல் கற்றுக்கொள்ளும் நிபுணத்துவம் பெற விரும்புகிறேன் என்று பதில் சொன்னார் அந்த இளைஞர். முட்டைக்கோஸ் எதற்காக என்று கேட்க, நான் நீந்திச் செல்லும் தீவுக்கு முட்டைக்கோஸ் தேவைப்படுமே என்றார் இளைஞர். முட்டைக்கோசைவிட இன்னும் சிறந்த உணவு அத்தீவில் உண்டு என பயிற்சியாளர் சொல்ல, எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றார் இளைஞர். ஒரு டன் முட்டைக்கோசுடன் நீந்த முடியாது என்று மீண்டும் பயிற்சியாளர் சொல்ல, எனக்கு அது பாரமல்ல, ஏனெனில் எனக்கு அத்தியாவசியமான பொருள் அது என்றார் இளைஞர். ஆம். நாம் நம்முடைய பேராசைகளுடன் பிறவிப் பெருங்கடலை ஒருபோதும் நீந்த முடியாது. பேராசைகளுடன் சாதனை படைக்க முயற்சிப்பது அறிவீனம்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |