2015-03-25 15:41:00

உலகின் முக்கிய நான்கு திருத்தலங்களில் செபமாலை பக்தி முயற்சி


மார்ச்,25,2015. மரியன்னையின் புகழ்பெற்ற திருத்தலங்களில், உலகின் முக்கிய நான்கு திருத்தலங்களில் இச்செவ்வாய் மாலை செபமாலை பக்தி முயற்சியும், திருப்பலியும் மேற்கொள்ளப்பட்டன.

உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம், மற்றும், லூர்து நகர், பாத்திமா நகர், குவாதலுபே நகர் மரியன்னை திருத்தல ஆலயங்கள் நான்கும் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டன.

திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் எழுதிய “Evangelium Vitae”, அதாவது, 'வாழ்வின் நற்செய்தி' என்ற சுற்றுமடலின் 20ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முயற்சியாக, குடும்பங்கள் திருப்பீட அவை இந்த முயற்சியை மேற்கொண்டது.

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இயேசுவின் வாழ்க்கை மறையுண்மைகளை மையப்படுத்தி சொல்லப்பட்ட செபமாலையைத் தொடர்ந்து, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

உரோம் நகர் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் குடும்பங்கள் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Vincenzo Paglia அவர்கள் முன்னின்று நடத்திய இந்த பக்தி முயற்சியும், திருப்பலியும் Telepace என்ற இத்தாலிய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆதாரம் : VIS / Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.