2015-03-24 15:41:00

மே 17 நிகழ்வில் கலந்துகொள்ள பாலஸ்தீனத் தலைவருக்கு அழைப்பு


மார்ச்,24,2015. வருகிற மே 17ம் தேதி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் Mary Alphonsine Ghattas, Mariam Baouardy ஆகிய இரு அருளாளர்களைப் புனிதர்களாக அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முதுபெரும் தந்தை Fouad Twal.

அண்மையில் பாலஸ்தீனத் தலைவர் Abbas அவர்களை சந்தித்தபோது இந்த அழைப்பை விடுத்தார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.

இந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்த Abbas அவர்கள், புனித பூமியில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளையும், பரப்பிவரும் அன்புச் செய்தியையும், நீதிக்கும் அமைதிக்கும் திருஅவை உழைப்பதையும் பாராட்டினார்.

புனித பூமியின் கலிலியில் 1846ம் ஆண்டு பிறந்த அருளாளர் அருள்சகோதரி Mariam Baouardy, பெத்லகேம் கார்மல் சபையை நிறுவியவர். இவர் தனது வாழ்நாளில் ஐந்துகாய வரம் பெற்றிருந்தார்.

மேலும், 1843ம் ஆண்டு எருசலேமில் பிறந்த அருளாளர் அருள்சகோதரி Mary Alphonsine Ghattas, செபமாலை அன்னை சகோதரிகள் சபையின் துணை நிறுவனராவார். இவர் 1927ம் ஆண்டில் எருசலேமில் இறந்தார்.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.