2015-03-24 15:37:00

பிரான்சில் 144 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து


மார்ச்,24,2015. பிரான்சில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் A320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக இச்செவ்வாயன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், அந்த விமானத்தில் 144 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்தனர் என்றும் உள்ளூர் பத்திரிகை ஒன்று கூறுகிறது.

லுஃப்தான்சா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான Germanwings விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானம் பார்செலோனாவிலிருந்து டுசல்டோர்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய அடையாளத்தை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஆதாரம் : பிபிசி /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.