2015-03-24 15:31:00

இந்தியாவில் கிறிஸ்தவ நிறுவனங்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு


மார்ச்,24,2015. இந்தியாவில் கிறிஸ்தவ நிறுவனங்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மும்பை உயர்மறைமாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் மார்ச் 25, இப்புதனன்று மூடப்படும் என்று மஹாராஷ்​டிர மாநிலக் கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இரவில் Panvel புனித ஜார்ஜ் கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டு அப்புனிதரின் உருவம் சேதமாக்கப்பட்டது, கடந்த வெள்ளிக்கிழமை ஜபல்பூரில் ஓர் ஆலயம் தாக்கப்பட்டது, கடந்த வாரத்தில் மேற்கு வங்காளத்தில் 71 வயது அருள்சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது போன்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை அக்கூட்டத்தில் குறிப்பிட்டனர் கிறிஸ்தவர்கள்.

தேர்வுகள் நடந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் அக்கூட்டத்தில் கூறப்பட்டது.      

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.