2015-03-23 15:47:00

மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவக் கோவில் மீது தாக்குதல்


மார்ச்23,2015. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் கிறிஸ்தவக் கோவில் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கிறிஸ்தவர்களிடையே அச்சம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜா.க. ஆட்சி இடம்பெறும் மத்தியப் பிரதேசத்தில், ஜபல்பூரில் கிறிஸ்தவக்கோவில் ஒன்றில், ஞாயிறு காலை வழிபாடு நடந்துக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று, அங்கு மதமாற்றம் இடம்பெறுவதாகக் கூறி, தாக்குதலைத் துவக்கியுள்ளது.

அங்கு குழுமியிருந்த மக்களைத் தாக்கியதுடன், கோவிலில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி, அருகிலிருந்த கிறிஸ்தவப் பள்ளிக்கும் சேதத்தை உருவாக்கியுள்ளது.

பஜ்ரங் தள், தரம் சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஆதாரம் : DINAMALAR /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.