2015-03-21 15:53:00

நேபாளம்-மனித வர்த்தகத்துக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் பலிகடா


மார்ச்,21,2015. நேபாளத்தில், பாலியல் தொழில் மற்றும் உடல்உறுப்பு பறிப்பு தொடர்புடைய மனித வர்த்தகத்தால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஐந்தாயிரம் பெண்கள் காணாமல்போகின்றனர் என்று அந்நாட்டு காவல்துறை அறிவித்தது.

பல நேரங்களில் இப்பெண்கள் தங்களின் சொந்தக் குடும்பங்களாலேயே விற்கப்படுகின்றனர் என்றுரைத்த கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர் Rupa Rai அவர்கள், நேபாள அரசு இவ்விவகாரத்தின்மீது அக்கறை காட்டி இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

2014ம் ஆண்டில் மேற்கு நேபாளத்தின் கய்லாலி மாவட்டத்தில் மட்டும் 118 பெண்கள் காணாமல்போயுள்ளனர், நேபாளத்தில் இடம்பெறும் மனித வர்த்தகத்தால் காணாமல்போகும் பெண்கள் மற்றும் சிறாரின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவில் உள்ளது பல வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2 கோடியே 90 இலட்சம் பேர் மனித வர்த்தகத்துக்குப் பலியாகின்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.