2015-03-21 15:58:00

அனைத்துலக தண்ணீர் தினம் மார்ச் 22


மார்ச்,21,2015. இன்றைய உலகின் மக்கள் தொகையில் 75 கோடிக்கு மேற்பட்ட மக்கள் சுத்தமான குடிநீர் வசதியின்றி வாழும்வேளை, பாதுகாப்பான குடிநீர், நலவாழ்வு வசதிகள் ஆகிய இவையிரண்டும் உடனடியாக உலகினருக்கு வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

மார்ச்,22 இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக தண்ணீர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், உலகில் ஏறக்குறைய 250 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட நலவாழ்வு வசதிகளின்றி வாழ்வதையும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய உலகில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒருங்கிணைந்த புதிய திட்டங்கள், ஒத்துழைப்பு மற்றும் கொள்கைகள் மூலமே தீர்வு காண முடியும், இவ்வாறு செய்தால் உலகில் வறுமையை ஒழித்து, வளமையை ஊக்குவித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்றும் தனது செய்தியில் கூறியுள்ள பான் கி மூன்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.