2015-03-20 15:51:00

அசீரிய ஆயர் ஜிகாதிகளுக்கு கடிதம்


மார்ச்,20,2015. கிறிஸ்தவர்கள் எந்த ஆயுதக் குழுக்களோடும் தொடர்பில்லாதவர்கள்  என்று அசீரிய ஆயர் ஒருவர் ஐ.எஸ். அரசின் ஜிகாதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Khabur பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களைப் பிணையல் கைதிகளாக வைத்திருக்கும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் ஜிகாதிகளுக்கு கடிதம் எழுதியுள்ள அசீரிய ஆயர் Afram Athnil அவர்கள், இக்கிறிஸ்தவர்கள், சிரியாவில் போரிடும் எந்தக் கட்சியுடனும் தொடர்பில்லாதவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அசீரிய கிறிஸ்தவ சமூகங்கள் ஆயுதக் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாதவை என்றும், இந்த உண்மையை சிரியாவில் போரிடும் எந்த ஆயுதம் ஏந்திய அமைப்பாலும் உறுதியாகக் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் Athnil.

அதேவேளை, Khabur ஆற்றுக்கு கிழக்கு கரையிலுள்ள அசீரியக் கிராமங்களை ஜிகாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரியிலேயே அங்கிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.