2015-03-19 16:43:00

இலங்கைத் தமிழர்களுக்கு சுவிஸ் நாட்டின் 5500 வீடுகள்


மார்ச்,19,2015. இலங்கை சென்றுள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் புர்க்ஹால்டர் (Didier Burkhalter) அவர்கள், யாழ்ப்பாணத்தில், சுவிஸ் நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் ஒன்றை, இப்புதனன்று பயனாளிகளுக்குக் கையளித்ததன் பின்னர், வடமாநில முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

சுவிஸ் நிறுவனத்தினால் கட்டப்பட்டுள்ள 35 வீடுகளை அங்கு மீள்குடியேறியுள்ள மக்களிடம் அவர் கையளித்ததோடு, அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு மக்கள் மையம், மற்றும் மழலையர் பள்ளி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

ஓன்றிணைந்து செயற்படுவதன் வழியாக கிராமத்து மக்களின் வளமான எதிர்காலத்திற்குரிய அணுகுமுறைகளையும் நம்பிக்கையையும் வளர்க்கமுடியும் என்பதற்கு, பதிய வீடுகள் அடையாளமாக அமைந்திருப்பதாக புர்க்ஹால்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடஇலங்கையில் 5500 வீடுகளையும் கிராமிய கட்டமைப்புக்களையும் உருவாக்குவதற்கு, சுவிஸ் நிறுவனம் முன்னுரிமை அளித்திருப்பதாகவும், 2009ம் ஆண்டிலிருந்து 35 மழலையர் பள்ளிகள், 5 பள்ளிகள், 77 பொதுக்கிணறுகள் என்பன கட்டப்படுள்ளதென்றும், சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.