2015-03-18 16:24:00

எபோலா மரணங்களால் பாதிக்கப்பட்ட 90 இலட்சம் குழந்தைகள்


மார்ச்,18,2015. எபோலா நோயினால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்ரிக்காவில், மரணங்களைக் கண்டதால் பாதிக்கப்பட்டுள்ள 90 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளைக் காப்பது உலக சமுதாயத்தின் கடமை என்று ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான UNICEF, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் விண்ணப்பம் செய்துள்ளது.

எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ள 24,000 பேரில், 5,000 குழந்தைகள் உள்ளனர் என்றும், 16,000த்திற்கும் அதிகமான குழந்தைகள், இந்த நோயினால் தங்கள் பெற்றோரில் ஒருவரையாகிலும் இழந்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

மரணம் என்பது என்னவென்று புரியாத வயதில், இந்த நோயினால் உருவான உயிர் இழப்புக்கள் 90 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளைப் பாதித்துள்ளது என்றும், இக்குழந்தைகளுக்கு இந்நோயைக் குறித்த சரியான புரிதலை உருவாக்க வேண்டும் என்றும் UNICEF அறிக்கை கூறுகிறது.

லைபீரியா நாட்டில் புதிதாக யாரும் எபோலா நோயினால் தாக்கப்படவில்லை என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, UNICEF அமைப்பு இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.