2015-03-17 16:08:00

பாகிஸ்தானில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்த அளவு பாதுகாப்பு


மார்ச்,17,2015. பாகிஸ்தானில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருந்தாலும், அண்மை நாள்களாக ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் மிகக் குறைவே என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழு குறை கூறியது.

தாக்குதல் நடந்த சமயத்தில்கூட அந்த இடத்திலிருந்த அதிகாரிகள் ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தங்களின் கடமையிலிருந்து தவறி தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில் ஆர்வமாய் இருந்தனர் என்று மேலும் அந்த ஆணைக்குழு கூறியது.

கடந்த காலத்தில் பாகிஸ்தானில் கிறிஸ்தவ சமுதாயம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால், ஆலயங்களையும், சிறுபான்மை சமூகங்களையும் பாதுகாப்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த ஆணைக்குழு கேட்டுள்ளது. 

மேலும், லாகூரில் இரு ஆலயங்களில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானின் குறைந்தது ஐம்பது முஸ்லிம் தலைவர்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். 

ஆதாரம் : Asianews / Fides/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.