2015-03-17 16:03:00

Vanuatuவில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி


மார்ச்,17,2015. தென் பசிபிக் பகுதியில் Pam புயலால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள Vanuatu மற்றும் Tuvalu தீவுகளின் இலட்சக்கணக்கான மக்களுக்கு பத்து இலட்சம் யூரோக்களை அனுப்புவதாக இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

வீடுகளின்றி பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு திருப்பீடத் தூதரகம் வழியாக இவ்வுதவி அனுப்பப்படுகின்றது என்று இத்தாலிய ஆயர் பேரவையின் தொடர்புத் துறை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்தது.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கடந்த ஞாயிறன்று இத்தீவு மக்களுக்காகச் செபித்தார் மற்றும் இவர்களுக்கு உதவும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, Vanuatu தீவின் மேற்குப் பகுதியிலுள்ள மக்கள் உப்பு நீரைக் குடித்து வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.