2015-03-16 15:01:00

பாலியல் வன்செயலால் பாதிக்கப்பட்ட அருள்சகோதரிக்காகச் செபங்கள்


மார்ச்,16,2015. Ranaghat நகர் அருள்சகோதரிகள் இல்லத்தைத் தாக்கிய ஆறு வன்முறையாளர்களில் நான்கு பேர் CCTV புகைப்பட கருவிமூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவேளை, இந்தியா முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் இஞ்ஞாயிறன்று பாலியல் வன்செயலால் பாதிக்கப்பட்ட அருள்சகோதரிக்காகச் மக்கள் செபித்தனர்.

இருபது மற்றும் முப்பது வயதுக்குட்பட்ட இந்த ஆறுபேரில் இருவர் தங்களை ஆயுதக் கவசத்தையும், மற்றவர்கள் பிற ஆயுதங்களையும் கொண்டு, அருள்சகோதரிகள் இல்லத்தில் நுழைந்து தொலைபேசி தொடர்பைத் துண்டித்துவிட்டு இவ்வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சிற்றாலயத்திலிருந்த திருவிவிலியத்தைக் கிழித்து இயேசுவின் மார்பளவு திருவுருவத்தை உடைத்து திருஅப்பங்களை இழிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, அரியானாவின் ஹிசர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கிறிஸ்தவ ஆலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக இதுவரை 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : AFP/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.