2015-03-10 16:55:00

திருமணம் குறித்த தகுந்த படிப்பினைகள் தேவை - கர்தினால் Burke


மார்ச்,10,2015. திருமணம் மற்றும் குடும்பம் குறித்த திருஅவையின் படிப்பினைகள், விசுவாசிகளுக்குத் தகுந்த முறையில் வழங்கப்படாவிட்டால், ஐரோப்பிய நாடுகளில், புதிய நற்செய்தி அறிவித்தல் பணி தோல்வியடையும் ஆபத்தில் உள்ளது என்று திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியின் வெற்றியானது, கிறிஸ்தவர்கள் திருஅவை படிப்பினைகளை உறுதியுடன் கடைபிடிப்பதைச் சார்ந்துள்ளது என்று கூறினார், Knights of Malta அமைப்பின் தலைவர், கர்தினால் Raymond Burke அவர்கள்.

கிறிஸ்தவத் தம்பதியரின் விசுவாசச் சாட்சியங்களும், திருமணம் போன்ற உயரிய உண்மைகளுக்காக துன்புறவும் தயாராக இருக்கும் கிறிஸ்தவர்களும் திருஅவையின் புதுப்பித்தலுக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்றும் கூறினார் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கர்தினால் Burke.

திருஅவை இன்று எதிர்கொள்ளும் சவால்களுள் முக்கியமானது, அதன் வாழ்வு குறித்தது, அதாவது, குடும்பங்கள் குறித்தது என்று கர்தினால் Burke அவர்கள் மேலும் கூறினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.