2015-03-10 15:33:00

கடுகு சிறுத்தாலும்... விண்ணகத்திற்குப் போகும் வழி


ஊருக்கு முதல்முறையாக வந்துசேர்ந்த ஓர் அருள்பணியாளர், தெருவோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனிடம் பங்குக் கோவிலுக்குச் செல்வதற்கு வழி கேட்டார். அச்சிறுவனும் கோவிலுக்குச் செல்லும் வழியை, தெளிவாகச் சொன்னான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பிய அருள்பணியாளர், சிறுவனிடம் திரும்பி, "நீயும் உன் நண்பர்களும் இன்று மாலை பங்கு கோவிலுக்கு வாருங்கள்" என்று அழைப்பு விடுத்தார். காரணம் என்ன என்று கேட்ட சிறுவனிடம், "விண்ணகத்திற்குச் செல்வது எப்படி என்று இன்று மாலை நான் எல்லாருக்கும் சொல்லப் போகிறேன்" என்று அருள் பணியாளர் உற்சாகமாகச் சொன்னார்.

அச்சிறுவன் அவரைப் பார்த்து, "சாமி, பங்கு கோவிலுக்குப் போற வழியே உங்களுக்குத் தெரியல. விண்ணகத்துக்குப் போற வழியப் பத்தி நீங்க சொல்லித் தரப்போறீங்களா? நல்ல வேடிக்கையாயிருக்கு சாமி!" என்று சொல்லிவிட்டு, சிறுவன் தன் விளையாட்டைத் தொடர்ந்தான்.

வழிகாட்டுவது எளிதான பணி அல்ல!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.