2015-03-10 16:47:00

உக்ரனில் துன்புறும் மக்களுக்கு உதவ 4 இலட்சம் டாலர் நிதி


மார்ச்,10,2015. உக்ரைனில் துன்புறும் மக்களுக்கு உதவும் அந்நாட்டு தலத்திருஅவையின் திட்டங்களுக்கு 4 இலட்சம் டாலரை வழங்குவதாக அறிவித்துள்ளது Knights of Colombus அமைப்பு.

உக்ரைன் நாட்டில் நிலவும் பெரும் மனிதகுல நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கும் குழந்தைகளுக்கும் இந்த குளிர்காலத்தில் உணவு வழங்கும் நோக்கில் நிதியுதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக உரைக்கும் Knights of Colombus அமைப்பு, உக்ரைனில் இடம்பெறும் ஆயுத மோதல்கள் பற்றி பேசும் உலக சமூகங்கள், அங்கு துன்புறும் முதியோர், குழந்தைகள் மற்றும் அகதிகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை என தெரிவிக்கிறது.

அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 10 இலட்சமாகும்

ஆதாரம்: CNS/வத்திக்கான வானொலி








All the contents on this site are copyrighted ©.