2015-03-06 14:53:00

ஆயர் Corti-புனித வெள்ளி சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகள்


மார்ச்,06,2015. வருகிற ஏப்ரல் 3ம் தேதி புனித வெள்ளிக்கிழமை இரவில் உரோம் நகரின் கொலோசேயத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை தியானச் சிந்தனைகளை இத்தாலியின் Novara மறைமாவட்ட முன்னாள் ஆயர் Renato Corti அவர்கள் தயாரிக்கிறார்.

இச்சிலுவைப்பாதை பக்தி முயற்சியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

மேலும், CL(Communion and Liberation) என்றழைக்கப்படும், ஒன்றிப்பு மற்றும் விடுதலை இயக்கத்தின் 47 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய அறுபதாயிரம் உறுப்பினர்களை இச்சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்தித்து உரையாற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

CL கிறிஸ்தவ இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு, இந்த இயக்கத்தை ஆரம்பித்த அருள்பணியாளர் Giussani அவர்கள் இறந்ததன் பத்தாம் ஆண்டு நிறைவு ஆகிய இரண்டு நிகழ்வுகளின் அடிப்படையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.

காலை 10.30 மணிக்கு, செப வழிபாட்டுடன் தொடங்கும் இந்நிகழ்வு திருத்தந்தையின் உரை மற்றும் ஆசிருடன் நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.